Friday, March 4, 2016

ஸ்ரீபரதேசி ஆறுமுகசாமி(ஜீவசமாதி) சன்னிதானம்,கோட்டுப்பாக்கம், சேத்துப்பட்டு தாலுக்கா, தி.மலை.

ஸ்ரீபரதேசி ஆறுமுகசாமி(ஜீவசமாதி)
சன்னிதானம்,கோட்டுப்பாக்கம்,
சேத்துப்பட்டு தாலுக்கா, தி.மலை.

ஓம் சிவாய நம !
தெய்வமடா தெரிசனத்திற் கண்டபோது
தேவரோடு முனிவர்களுங் காணமாட்டார்
கவசமடா கைவல்யந் தன்னைப்பாரு
கருத்திலே தோணுமடா கண்டுபாரு
சைவமடா சாயுட்ச பதவியாகும்
சகலருக்குந் தெய்வஞ் சண்முகனுமாச்சு
யெய்துமடா பேரின்பக் கனையின்லே
யிதமறியா மூடர்களை யெய்துபாரே !

யெய்துபா ரென்றுசொன்ன குருவே அய்யா
யெக்காலந் துயரமெல்லாந் தீருமோசொல்
வயதுமே பத்தான கன்னிதானும்
வையகத்தி லடுமையெனக் கொள்வதெப்போ
செய்துபா ரென்றுமே சொல்லவேண்டாம்
செய்கரும மெந்தனுக்குச் சொல்லவேணும்
மையதுபார் காமனுட பாணந்தானும்
மார்பில் தைக்காமல் மனம்காட்டு வீரே !
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்


ஸ்ரீபரதேசி ஆறுமுகசாமி குருவின் திருவருள் பார்வைபெற்று ஞானமறிந்தோர்க்கு நமனில்லை நாதனருளால் பதவி நாடும் வேதமறை
போற்றும் நாதன் பாதம் பணிவோம் வாருங்கள் !

No comments:

Post a Comment